ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க தேரோட்டம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க தேரோட்டம்

Published On 2021-03-06 02:36 GMT   |   Update On 2021-03-06 02:36 GMT
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தங்க தேரோட்டத்திற்காக கட்டளைதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் கட்டளைதாரரின் குடும்பத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தங்க தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதனிடையே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தேரோட்ட நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் கட்டளைதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நேற்று தங்க தேரோட்டத்திற்காக கட்டளைதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் கட்டளைதாரரின் குடும்பத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இனிவரும் காலங்களில் தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் தேரோட்டம் நடைபெறும் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News