செய்திகள்
தற்கொலை

காரமடை அருகே சாணிபவுடர் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2019-10-04 15:54 GMT   |   Update On 2019-10-04 15:54 GMT
காரமடை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரமடை:

காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம், அம்பேத்கார் நகரைசேர்ந்தவர் பரதன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் சுபாஷினி (வயது 19). இவர் கன்னார்பாளையத்தில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி, ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மனவேதனையில் காணப்பட்டார்.   நேற்று காலை , வீட்டில் யாரும் இல்லாத போது சாணிப்பவுடரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  

இதேபோல் காரமடை சிறுமுகை ரோட்டில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (48). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்ரமணி காரமடை அருகே உள்ள நூற்பு ஆலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணியில் இருந்த சுப்ரமணி திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மேட்டுபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து காரமடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News