செய்திகள்
முககவசம்

ஓடும் பஸ்சை நிறுத்தி முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்

Published On 2021-04-17 11:42 GMT   |   Update On 2021-04-17 11:42 GMT
திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சை பரமன்குறிச்சி அருகே திடீரென போலீசார் வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் முககவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

உடன்குடி:

கொரோனா தாக்கத்தின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சை பரமன்குறிச்சி அருகே திடீரென போலீசார் வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் முககவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

மேலும் முககவசம் போடாத பயணிகளை பஸ்சில் ஏற்ற வேண்டாம், பயணம் செய்யும்போது முககவசம் கட்டாயம் போட வலியுறுத்த வேண்டும் என கண்டக்டரிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

Similar News