செய்திகள்
காட்டு யானைகள்

கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்த யானைகள்

Published On 2019-11-18 11:20 GMT   |   Update On 2019-11-18 11:20 GMT
கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் புகும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே வில்பட்டி கோவில்பட்டி பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்பட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

இதையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்தில் புகும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இன்று வெங்கலவயல் பகுதியில் திடீரென 4 காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. இதை பார்த்ததும் விவசாயிகள் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். விவசாய நிலத்தில் புகுந்த யானைகள் பீன்ஸ், உள்பட காய்கறிகளை நாசம் செய்தன.

மேலும் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News