ஆன்மிகம்
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த வசந்த விழா

Published On 2021-04-24 03:29 GMT   |   Update On 2021-04-24 03:29 GMT
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் வசந்த விழா நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், வசந்த விழா பக்தர்கள் இன்றி நடந்தது.
நாகை மாவட்டம் திருகுவளை அருகே உள்ள எட்டுக்குடியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வசந்த விழா நடைபெற்றது.அப்போது சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுப்பிரமணியர் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

வசந்த விழாவில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், வசந்த விழா பக்தர்கள் இன்றி நடந்தது.
Tags:    

Similar News