செய்திகள்
மாயம்

நெல்லை அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2021-08-19 09:41 GMT   |   Update On 2021-08-19 09:41 GMT
நெல்லை அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த மூன்றடைப்பு அருகே உள்ள பானான்குளத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் ராமலட்சுமி (வயது21). இவர் 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஐஸ் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. நேற்று வீட்டில் இருந்த ராமலட்சுமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News