உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தேசிய ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம்

Published On 2022-05-07 10:07 GMT   |   Update On 2022-05-07 10:07 GMT
தாண்டவன்குளம்அ ரசு பள்ளியில் தேசிய ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:

கொள்ளிடம் ஒன்றியம் தாண்டவன் குளம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் கூட்டணி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் போகர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் கவிதா வரவேற்றார்.நிர்வாகிகள் ராஜேந்திரன் லதா, சுஜாதா, மதிவாணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கடந்த ஆறுமாத காலமாக தாண்டவன் குளம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களுக்கும் மாத சம்பளம் வழங்கவில்லை.

2017-ம் ஆண்டுமுதல் தேர்வு நிலை ஊதியம், ஊக்க ஊதியம், சிறப்பு நிலை ஊதியம், ஊதிய உயர்வு வழங்கவில்லை.எனவே அனைத்து வகை ஊதியம் உள்ளிட்ட ஆறு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
காணாமல் போன ஆசிரிய ர்களின் பணிப்பதி வேடுகளை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மா னங்கள் நிறைவே ற்றப்ப ட்டன. இதில் ஆசிரியர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News