புதுவையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தாயின் 2-வது கணவர் மீது வழக்கு
புதுச்சேரி:
புதுவை காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் பானு (வயது 26). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமியின் முதல் கணவர் பிரிந்து சென்று விட்டதால் 2-வதாக ஆட்டோ டிரைவரான லோகையனை தனலட்சுமி திருமணம் செய்தார்.
லோகையன் மூலம் தனலட்சுமிக்கு ஆண் குழந்தை உள்ளது. தொடக்கத்தில் பானு மீது பரிவு - பாசம் காட்டிய லோகையன் அதன் பிறகு பானுவை எதிரியாக நினைத்தார்.
மேலும் பானுவுக்கு லோகையன் அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
அதோடு பானுவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இதனை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக லோகையன் மிரட்டி வந்தார்.
ஆனால், தனலட்சுமி இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார். நாளுக்கு நாள் சித்ரவதை அதிகரிக்கவே பானு இது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் லோகையன் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளார்.