செய்திகள்
வேலையில் போதிய வருமானம் இல்லாததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
வேலையில் போதிய வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 33). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஆனால் வேலையில் போதிய வருமானம் இல்லாம் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக பிரசாந்த் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று கோவை வந்த இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் லாட்ஜில் வைத்து மதுவுடன் விஷத்தை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரசாந்த் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.