செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது
மேட்டுப்பாளையம் அருகே கஞ்சா விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டபோது சிறுமுகை ரோடு பழைய சந்தை கடை உள்ள இறைச்சி கடை பாத்ரூம் அருகே நின்று கொண்டு கஞ்சா விற்க முயன்ற நாகராஜ் (வயது 36), லிப்டன் (31) ஆகிய 2 பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.