செய்திகள்
கோப்புபடம்

வாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

Published On 2020-10-24 15:01 GMT   |   Update On 2020-10-24 15:01 GMT
வாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி- நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி வட்ட வழங்கல் அலுவலர் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சம்பத் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 27 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர் மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News