செய்திகள்
இண்டூர் அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது
இண்டூர் அருகே மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள சின்னகாம்பட்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மேல்குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவர் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.