உள்ளூர் செய்திகள்
ஆலை தொழிலாளர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
ஆலை தொழிலாளர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்
புதுச்சேரி:
புதுவை சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் கடலூர் சாலையில் உள்ள பாரதி மில் அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவரது முன்னிலையில் ரத்தினசபாபதி, புருஷோத்தமன், தெய்வநாயகம், கண்ணதாசன், பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
பின்னர் அவர்கள், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளையும் பெற்றுத் தந்த அசோக்பாபு எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர்
செல்வம், நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்னவேல், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.