செய்திகள்
தற்கொலை முயற்சி

தாம்பரம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2021-01-11 07:37 GMT   |   Update On 2021-01-11 07:37 GMT
தாம்பரம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி:

ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரை சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் உடன் வேலை பார்க்கும் 2 குழந்தைகளுக்கு தந்தையான 33 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இதுபற்றி அறிந்ததும் இளம்பெண்ணை அவரது கணவர் கண்டித்தார். இதற்கிடையே கடந்த 4-ந் தேதி இளம்பெண் திடீரென மாயமானார்.

இதுபற்றி அவரது கணவர் ஆவடி டேங்க்பேக்டரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண் திடீரென தனது கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‘‘தாம்பரம் அருகே தங்கி உள்ளோம். நாங்கள் வி‌ஷம் குடித்து விட்டோம்.

கடைசியாக உங்களை பார்க்க வேண்டும் வாருங்கள்’’ என்று தெரிவித்து இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் பதறிப்போன இளம்பெண்ணின் கணவர் தாம்பரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவியும், கள்ளக்காதலனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர்களை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல் ஜோடியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News