செய்திகள்
கல்பாக்கம் அருகே சாராயம் விற்றவர் கைது
கல்பாக்கம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அருகே காரைத்திட்டு பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது பாக்கியராஜ் சாராயம் விற்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.