செய்திகள்
பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்ட டப்பாவில் இருந்த தண்ணீரை குடித்த குழந்தை பலி
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்ட டப்பாவில் இருந்த தண்ணீரை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த தொழிலாளி கோபால். இவருடைய 2 வயது குழந்தை சரத். இந்த குழந்தையை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகே உட்காரவைத்து விட்டு விவசாய பணியில் கோபால் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கிடந்த பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்ட காலி டப்பாவில் இருந்த தண்ணீரை குடித்த குழந்தை வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோபால் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த தொழிலாளி கோபால். இவருடைய 2 வயது குழந்தை சரத். இந்த குழந்தையை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகே உட்காரவைத்து விட்டு விவசாய பணியில் கோபால் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கிடந்த பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்ட காலி டப்பாவில் இருந்த தண்ணீரை குடித்த குழந்தை வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோபால் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.