செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2021-05-24 10:53 GMT   |   Update On 2021-05-24 10:54 GMT
தென்காசி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது37). இவரது மனைவி வெள்ளத்தாய் என்ற வெள்ளைத் துரைச்சி (35).

நேற்று வெள்ளத்தாய் குடிநீர் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News