ஆன்மிகம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக சென்ற பக்தர்கள்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-04-10 06:52 GMT   |   Update On 2021-04-10 06:52 GMT
பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலுக்கு நேற்று பிரதோஷத்தையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மதியம் 12.10 மணி அளவில் வனத்துறை கேட் மூடப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News