செய்திகள்
அபராதம்

அரூர் அருகே முயலை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

Published On 2021-08-29 10:51 GMT   |   Update On 2021-08-29 10:51 GMT
அரூர் அருகே முயலை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரூர்:

அரூர் அருகே உள்ள குரும்பட்டி வனப்பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன், வனவர் மதியழகன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் கம்பி வலை விரித்து முயலை வேட்டையாடுவது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பொய்யப்பட்டியை சேர்ந்த ராம்தாஸ் (வயது 46), குரும்பட்டியை சேர்ந்த கண்ணன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். முயலை வேட்டையாடியதற்காக அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News