செய்திகள்
கைது

ஊத்துக்கோட்டையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த சென்னை ரவுடி கைது

Published On 2020-01-09 09:45 GMT   |   Update On 2020-01-09 09:45 GMT
ஊத்துக்கோட்டையில் வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சென்னை ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை எம்.ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஊத்துக்கோட்டை பஜார் தெருவில் தள்ளு வண்டியில் பானிப்பூரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வாலிபர் ஒருவர் அவரது கடைக்கு வந்து பானி பூரி சாப்பிட்டார். பின்னர் சுரேசிடம் கத்தியை காட்டி ரூ.1500 பணம் கொடுக்குமாறு மிரட்டினார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 8-வது தெருவை சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பது தெரிந்தது.

பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கடத்தல், கொள்ளை உள்பட 17 வழக்குகள் உள்ளன.

போலீசார் ஜோதீஸ்வரனை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News