செய்திகள்
தீபிகா குமாரி

வில்வித்தை ரேங்கிங் சுற்று: தீபிகா குமாரி 9-வது இடம்

Published On 2021-07-23 03:09 GMT   |   Update On 2021-07-23 03:09 GMT
பெண்களுக்கான ஆர்ச்சரி ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி துல்லியமான இலக்கு புள்ளியை (Xs) 13 முறை சரியாக குறிவைத்து அம்பு எய்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரேங்கிங் சுற்று இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். 

இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்தார். அவர் 30 முறை 10 புள்ளிகள் பெற்றார். மேலும் 13 முறை துல்லியமான (Xs) இலக்கை  அம்பு தாக்கியது.

கொரிய வீராங்கனை அன் சன் 680 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இது ஒலிம்பிக் போட்டியின் சாதனையாகும்.

28-ந்தேதி நடைபெறும் நாக்அவுட் சுற்றில் (1/32) தீபிகா குமாரி பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொள்கிறார். 
Tags:    

Similar News