ஆட்டோமொபைல்
அக்டோபர் முதல் இப்படித் தான் - டொயோட்டா அதிரடி
டொயோட்டா நிறுவன கார்களின் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை அக்டோபர் முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு ஈடு செய்ய முடியும்.
இம்முறை எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விலை ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான புதிய விலை பட்டியல் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
கடந்த மாதம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யாரிஸ் செடான் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக டொயோட்டா அறிவித்தது.