ஆன்மிகம்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-11-16 08:39 GMT   |   Update On 2020-11-16 08:39 GMT
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அரசு அனுமதி அளிக்கவில்லை.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் நேற்று காலை சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அரசு அனுமதி அளிக்கவில்லை.

கந்தசஷ்டி திருவிழாவில் அனைத்து வைபவங்களும், கோவிலின் உள்ளே நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழா வருகிற 23-ந் தேதி(திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News