செய்திகள்
நிலக்கோட்டை அருகே நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்
நிலக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பெண் படுகாயமடைந்தார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குடும்பத்துக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கண்ணன் மனைவி ஜெயந்தியை ரமேஷ், அவரது மனைவி சரண்யா, உறவினர்கள் சுந்தரி, சங்கீதா ஆகியோர் கடுமையாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த ஜெயந்தி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார். இதே போல் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.