செய்திகள்

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ.10 கோடி வழங்கியது தமிழக அரசு

Published On 2019-05-13 07:27 GMT   |   Update On 2019-05-13 07:27 GMT
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளரிடம் வழங்கினார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க 5-5-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார்.


அதன்படி இன்று (13-ந் தேதி) ரூ. 10 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித்குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News