செய்திகள்
கொரோனா வைரஸ்

பிரேசிலில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா

Published On 2020-08-23 21:39 GMT   |   Update On 2020-08-23 21:39 GMT
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 32 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலியா:

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது.

அங்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேபோல் உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 32 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 82 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 892 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News