செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மிரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தோடா மாவட்டத்தில் உள்ள கோண்டானா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
விசாரணையில், சுட்டுக் கொல்லப்பட்டது ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த ஹாரூண் அப்பாஸ் என தெரிய வந்தது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.