செய்திகள்
பேட் கம்மின்ஸ்

ஐபிஎல் போட்டியும் நடக்கும், டி20 உலக கோப்பையும் நடக்கும்: பேட் கம்மின்ஸ் நம்பிக்கை

Published On 2020-04-03 09:21 GMT   |   Update On 2020-04-03 09:21 GMT
ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் ஏறக்குறைய அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 2020 சீசன் வரும் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முழுமையான ஒத்திவைக்கப்படவில்லை. ஆனால் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் போட்டியை இன்னும் ரத்து செய்யவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆறு மாதங்களுக்கு எல்லையை மூடியுள்ளது. இதனால் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

ஆனால் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய கிரிக்கெட் தொடர்களும் நடைபெறும் என கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘அவர்கள் உண்மையிலேயே இதுவரை போட்டி ரத்து செய்யவில்லை. அதுபோன்ற எண்ணமும் அவர்களுக்கு இதுவரை இல்லை. இன்னும் அந்த முடிவிலேயே இருப்பதால் நாங்கள் எங்கள் அணிகளுடன் சில நாட்களுக்கு ஒருமுறை தொடர்பில் இருந்து வருகிறோம்.

ஒவ்வொருவரும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில்தான இருக்கிறோம். ஆனால் வைரஸ் தொற்றின் பரவுதலை குறைப்பதற்கே முன்னுரிமை.

டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்கள் உள்ளன. மிகப்பெரிய தொடரான இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் உள்ளன. அதற்குள் ஏராளமான விஷயங்கள் மாறலாம்’’ என்றார்.
Tags:    

Similar News