செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2021-09-11 11:56 GMT   |   Update On 2021-09-11 11:56 GMT
திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேன்மொழி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News