ஆன்மிகம்
உலகநாயகி அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
உருளையன்பேட்டை சுந்தரமூர்த்தி விநாயகர், உலக நாயகி அம்மன், ஒண்டிவீர அய்யனாரப்பன் கோவிலில் தைத்திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
உருளையன்பேட்டை சுந்தரமூர்த்தி விநாயகர், உலக நாயகி அம்மன், ஒண்டிவீர அய்யனாரப்பன் கோவிலில் தைத்திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூங்கரகம் வீதியுலா, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் நடந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கூழ் ஊற்றினார். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இரவு சிவன், பார்வதி, முருகன் வீதியுலா நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு உலகநாயகி அம்மன் வீதியுலா நடக்கிறது.