செய்திகள்
தற்கொலை

திருச்செங்கோடு அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-11-21 09:05 GMT   |   Update On 2020-11-21 09:05 GMT
திருச்செங்கோட்டில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு தொண்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி பரமத்திவேலூருக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுபற்றி திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News