செய்திகள்
தற்கொலை

திருமணம் பிடிக்காததால் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-09-07 06:18 GMT   |   Update On 2019-09-07 06:18 GMT
சென்னை கோயம்பேட்டில் திருமணம் பிடிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு சின்மயா நகர் குலசேகரபுரம் வேதா சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் பிரியங்கா. இவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தனர். வருகிற 9-ந்தேதி நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வந்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பிரியங்கா நேற்று மாலை பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் இரவு படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். அவர் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராமகிருஷ்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பிரியங்கா மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் பிரியங்கா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News