செய்திகள்
மின் நிறுத்தம்

அவனியாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-09-23 09:15 GMT   |   Update On 2019-09-23 09:15 GMT
அவனியாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை மேற்கு மின் வினியோக செயற் பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் பாதைகளுக்கான மழைக் கால முந்தைய ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, வ.உ.சி. தெரு, சி.ஏ.எஸ். நகர், சொக்கப்பிள்ளைத் தெரு, கிளாட்வே, ஜெயபாரத் சிட்டி, கற்பக நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இதே போல் அரசரடி உயர் மின் அழுத்த பாதையிலும் ஆய்வுப்பணி நடை பெற உள்ளதால் பொன் மேனிபுதூர், எஸ்.எஸ்.காலனி, பாரதியார் தெரு, சுப்பிரமணிய பிள்ளை தெரு, சொக்கலிங்க நகர், பொன்மேனி, டி.எஸ்.பி. நகர், பைபாஸ் ரோடு மேல்புறம் மற்றும் கீழ்புறம், சந்திரகாந்தி நகர் பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News