செய்திகள்
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடலூர் சில்வர் பீச்சில் கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2021-11-18 07:09 GMT   |   Update On 2021-11-18 07:09 GMT
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர்:

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 3 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் மோதி சென்றன.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News