செய்திகள்
பர்கூர் அருகே விஷம் குடித்து பால் சொசைட்டி ஊழியர் தற்கொலை
பர்கூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பால் சொசைட்டி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாலிநாயனப்பள்ளி கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர். இளங்கோவன் (வயது50). இவர் அதே பகுதியில் உள்ள பால் சொசைட்டியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பல்வேறு இடங்களில் இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. இதனால் மனமுடைந்த இளங்கோவன் கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.