உள்ளூர் செய்திகள்
விபத்து

கடலூர் முதுநகரில் பஸ் மோதி 2 பேர் பலி

Published On 2022-01-29 03:36 GMT   |   Update On 2022-01-29 03:36 GMT
கடலூர் முதுநகரில் பஸ் மோதி சிதம்பரத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:

சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் அசோக்குமார்(வயது 40). இவரும், அம்மாபேட்டையை சேர்ந்த பத்திநாதன் மகன் சந்தியாகு(38) என்பவரும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சந்தியாகு ஓட்டினார். கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் சென்றபோது, எதிரே சேலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில அசோக்குமாரும், சந்தியாகுவும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுக போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News