செய்திகள்
அரசு துறையில் கருப்பு ஆடுகள்- உயர்நீதிமன்றம் வேதனை
தங்களுடைய சுய லாபத்திற்காக, அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடும் கருப்பு ஆடுகள் சில அரசு துறையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தங்களுடைய சுயலாபத்திற்காக, அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடும் கருப்பு ஆடுகள் சில அரசு துறையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
அந்த கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது நலனில் தாக்கம் ஏற்படும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
கோவையில் நிலம் எடுப்பை எதிர்த்த வழக்கில் உண்மை ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.