ஆன்மிகம்
தொட்டியம் கடைவீதியில் பகவதி அம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை
திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதி பகவதி அம்மன் கோவிலில் பகவதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொட்டியம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் மார்கழி மாத சிறப்பு பூஜை மற்றும் மாரியம்மன் கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பகவதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொட்டியம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து விடையாற்றி நிகழ்ச்சி இன்று இரவு (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.