செய்திகள்
ராஜபாளையத்தில் நாளை மின்தடை செய்யபடுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆதலால் ராஜபாளையம் கிழக்குபகுதியில் நாளை (திங்கட்கிழமை) பி.எஸ்.கே.நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், ஐ.என்.டி.சி. நகர், பாரதி நகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்கா பேரி, புதூர், மொட்டை மலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் மாலதி கூறினார்.