செய்திகள்
கொரோனா வைரஸ்

பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக 4 பேருக்கு கொரோனா

Published On 2021-10-23 09:30 GMT   |   Update On 2021-10-23 09:30 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 40 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 64 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News