செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த காட்சி.

வேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

Published On 2021-04-10 01:14 GMT   |   Update On 2021-04-10 01:14 GMT
வேகமெடுக்கும் கொரோனா 2-வது அலையால் மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு செல்லும் சூழ்நிலை உள்ளது.
மன்னார்குடி:

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு வரை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்களிடையே பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா 2-வது அலை வேகம் எடுத்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு செல்லும் சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தடுப்பூசியினால் மட்டுமே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் இரண்டாவது அலையில் இளம்வயதினரும் அதிகம் பாதிப்பதாக தகவல்கள் வந்திருக்கும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த அரசு முன்வர வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News