செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக 4505 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 4505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4854 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது.
இன்று கேரளாவில் புதிதாக 4,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 4,854 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை கேரளாவில் 59,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து 9,61,789 பேர் குணமடைந்துள்ளனர்.