ஆன்மிகம்
சொர்ணாகர்ஷண பைரவர்

இடையார் பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

Published On 2021-07-31 06:59 GMT   |   Update On 2021-07-31 06:59 GMT
இடையார் பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி மாத தேய்பிறை நீலகண்டாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.
புதுவை - கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கே நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி மாத தேய்பிறை நீலகண்டாஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.

தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News