செய்திகள்
விபத்து பலி

அச்சரப்பாக்கம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

Published On 2020-10-24 08:15 GMT   |   Update On 2020-10-24 08:15 GMT
அச்சரப்பாக்கம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், போந்தூர் ஊராட்சி, வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் குருநாதன் (வயது26).

இவர் மோட்டார் சைக்கிளில் அச்சரப்பாக்கம் சென்று விட்டு வீடு திரும்பும்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருக்கருணை பகுதியில் வளைவில் திரும்பும்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குருநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். அச்சரப்பாக்கம் போலீசார் குருநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News