செய்திகள்
திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

Published On 2021-10-08 10:13 GMT   |   Update On 2021-10-08 10:13 GMT
பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத்:

உடன்குடி அருகே உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மனைவி ஜெயா (வயது 80). இவர் நேற்று மாலை உடன்குடியில் இருந்து நாசரேத்துக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பேருந்தில் அருகில் இருந்து பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை அபேஸ் செய்துள்ளார். இது குறித்து ஜெயா நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை திருடிய இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News