செய்திகள்
முக ஸ்டாலின்

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-09-15 07:47 GMT   |   Update On 2020-09-15 13:16 GMT
கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா தொடர்பான மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. குழுவின் அறிக்கை என்ன ஆனது? 

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? 

மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை முறையாக வழங்கப்பட்டுள்ளதா?

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News