செய்திகள்
கைது

உதகை: தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது

Published On 2020-11-22 05:54 GMT   |   Update On 2020-11-22 05:54 GMT
நீலகிரி மாவட்டம் உதகையில், தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
உதகை:

நீலகிரி மாவட்டம் உதகை கூட்செட் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த விடுதிக்குள் நுழைந்த போலீசார், சோதனை நடத்தினர். இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள், அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டது.

பின்னர், தங்கும் விடுதி உரிமையாளர் உட்பட 32 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1,50,000 ரூபாய் மற்றும் சூதாட்டத்திறக்கு பயன்படுத்தபட்ட பொருட்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர். உதகையில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவாக உள்ளதால், பல விடுதிகள் சூதாட்ட விடுதிகளாக மாறியுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Tags:    

Similar News