ஆன்மிகம்
பாலசமுத்திரம் கல்யாண சோமேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

பாலசமுத்திரம் கல்யாண சோமேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

Published On 2021-08-17 05:33 GMT   |   Update On 2021-08-17 05:33 GMT
பாலசமுத்திரம் கல்யாண சோமேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலாபிஷேக நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் தண்ணீர் துறை தெருவில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்ட கல்யாண சோமேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலாபிஷேக நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலை சிறப்பு யாக வேள்விகளும், பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் கோவில் வளாகத்தில் சிவனடியார்கள் கலந்துகொண்ட திருவாசக பக்தி பாராயணம் நிகழ்ச்சி மேளதாளத்துடன் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News