தொழில்நுட்பம்
விரைவில் இந்தியா வரும் ரியல்மி பேட்
ரியல்மி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி பேட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். புதிய ரியல்மி பேட் மாடலுக்கான டீசரை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த டேப்லெட் குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் டூயல்-டோன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரிகிறது. புதிய ரியல்மி பேட் மாடலில் 8 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8எஸ் 5ஜி மற்றும் ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் இதே நிகழ்வில் ரியல்மி பேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.