செய்திகள்
டோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா உறுதியான டோனியின் பெற்றோருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்தவர் மகேந்திர சிங் டோனி. அவர் தலைமையில் இந்தியா 2 உலக கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில் டோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை பான்சிங் டோனி மற்றும் தாயார் தேவகிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்தவர் மகேந்திர சிங் டோனி. அவர் தலைமையில் இந்தியா 2 உலக கோப்பையை வென்றுள்ளது.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.
இந்த நிலையில் டோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை பான்சிங் டோனி மற்றும் தாயார் தேவகிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.